Sunday, May 10, 2009

கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை

பிரிவுகள்
************

தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை:


பிரிவுகள்

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்

மிக அழகான கவிதை. குளத்தில் நீர் வருவது என்பது கிராமம் முழுவதற்குமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. குளத்தில் நீர் வந்து நிறையுமானால், குடிநீர், விவசாயம், அதன் மூலம் கிராம வளம் எல்லாம் பெருகும். உற்சாகம் பெருகும். செயல்பாடுகள் கூடும். வேலைகள் கூடும். உற்பத்தி கூடும்.

ஆனால், கலாப்ரியா கண்ணில் வேறொன்று படுகிறது. இது நாள் வரை நீர் வராமல் இருந்தபோது, அதே குளம் எதெதற்கெல்லாம் பயன்பட்டதோ, அவையெல்லாம் இனி நடைபெற முடியாமல் போய்விடுமே என்ற வருத்தம் அவருக்குத் தென்படுகிறது. என்ன சொல்கிறார் பாருங்கள் : வண்டித் தடங்களை இனி காண முடியாது, புல் மேய்ந்த ஆடு இனி வெறுமையைச் சந்திக்கும், மேலே பறக்கும் கழுகின் நிழலைப் பார்க்க முடியாது. இது ஒரு வகை வலிந்து உருவாக்கப்படும் முரண் அணி.

உண்மையில் கவிக்கு அந்தக் குளத்தில் நீர் வருவதில் மகிழ்ச்சி இல்லையா? அதெப்படி இல்லாமல் இருக்கும். நிச்சயம் உண்டுதான். அதுதான் வளர்ச்சி தரப்போவது. அதனால்தான், கவிதையின் முதலிலும் கடைசியிலும் குளத்தில் நீர் வரப்போவதை அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், இன்றுவரை, அதே குளத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கும் பிறர் அதனால் பாதிக்கப்படுவார்களே என்பது ஒரு சின்ன கரிசனம்.

இதை வேறு மாதிரியாகவும் வாசிக்கலாம். அதுநாள் வரை மழையே இல்லாமல், நீர் வரத்தே இல்லாமல் பல ஆண்டுகளாக, இப்படிப்பட்ட வண்டித்தடம் உருவாதல், ஆடு புல் மேய்தல், கழுகின் நிழல் படிதல் போன்ற விஷயங்கள் ஏற்பட்டுவிட்டன. அதுவே இயல்பு என்று நினைக்கும் அளவுக்கு, நீர் பஞ்சம் அங்கே இருந்திருக்கவேண்டும். சட்டென, நாளை இக்குளத்தில் நீர் வருமானால், அதுவரை இருந்த இயல்பு பாதிக்கப்படுமே என்ற கரிசனத்தைக் இக்கவிதை சொல்வதாகவும் கொள்ளலாம். நீர் பெருகி பல ஆண்டுகள் ஆயிற்று என்பதற்கு கவி தரும் ஒரு முக்கிய ஆதாரம், வண்டித்தடம் உருவாதல். அவ்வளவு சீக்கிரத்தில் வண்டித்தடம் உருவாகிட முடியாது. பல ஆண்டுகள் பயன்பாட்டிலேயே வண்டித்தடம் உருவாக முடியும்.

இக்கவிதையை நீர் வரத்தின் மகிழ்ச்சியாகவும், இருப்பவைகள் இழக்கப் போகும் இயல்பைச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிதை இப்படி பல அடுக்கு அர்த்ததைத் தன்னுள் கொண்டிருப்பது அபூர்வமானது. இக்கவிதை அப்படிப்பட்ட ஒரு அபூர்வம்.

Saturday, May 9, 2009

பூவந்தி - பெயர்க்காரணம்





பூவந்தி - பெயர்க்காரணம்
--------------------------------
பூவந்தி என்பது ஒரு மரத்தின் பெயராகும். ஆங்கிலத்தில் South India Soapnut என்று சொல்லப்படுகிறது.இந்த பெயர் எப்படி வந்தது என்ற ஆராய்ச்யில் ஈடுபட்டுள்ளேன், இந்த பெயர் இந்த ஊருக்கு எப்படி வந்தது என்று தெரிந்திருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் rasiganbalu@gmail.com...

இந்த மரத்தின் விவரங்கள் பிவருவன
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Common name: South India Soapnut, three-leaf soapberry, trijugate-leaved sop-nut • Hindi: फेनिल phenil, रिष्ट risht, रिष्टक rishtak • Manipuri: কেক্ৰূ Kekru • Marathi: फेनिल phenil, रिंठी rinthi, रिठा ritha • Tamil: புனலை punalai, பூந்தி punthi, பூவந்தி puvanti • Malayalam: ചവക്കായ് cavakkaay, പശക്കൊട്ടമരം pasakkottamaram, ഉറുവഞ്ചി uruvanchi • Telugu: కుంకుడుచెట్టు kunkuduchettu, ఫేనిలము phenilamu • Kannada: ಅಮ್ಟಳಕಾಯಿ amtalakaayi, ನೊರೆಕಾಯಿ norekaayi, ತೊಗಟೆ ಮರ togate mara • Bengali: ৰীঠা Ritha • Oriya: ରୀଠା Ritha • Konkani: रिठा ritha • Urdu: Phenil, ريٹھا Reetha • Assamese: হাইঠা aritha • Gujarati: અરીઠી arithi, અરીઠો aritho, અરીઠું arithu • Sanskrit: हृष्टः hrishtah, फेनका phenaka, फेनिल phenil, रिष्टः rishtah, रिष्टक rishtak, रीठा rita, सारिष्ट sarishta, ऊर्ध्वशोधनः urdhvashodhanah Botanical name: Sapindus trifoliatus Family: Sapindaceae (Soapberry family)
Synonyms: Sapindus laurifolius


South India Soapnut is a large tree, growing up to 25 m tall. Leaves are compound, 15-30 cm long. Leaflets are nearly stalkless, 2-3 pairs, 8-18 cm long, 5-7.5 cm broad, elliptic-lanceshaped, smooth, pointed tipped, base slightly oblique, terminal pair longest. Flowers are greenish-white, in terminal, slightly velvety panicles. Flower stalks are 3 mm long, velvety. Sepals are 5, slightly fused at the base, 4-5 mm long, ovate-oblong, velvety. Petals are 5, free, 5-6 mm long, lance-shaped to ovate, clawed, bristly. Disc is 5-lobed. Stamens are 8, free, filaments 2-3 mm long. Ovary is 3-locular, 3-lobed, ovoid, about 3 mm long, velvety, with 1 ovule in each locule. Fruit is 2-3 lobed, 1.3-2 cm long, velvety when young, hard and smooth when mature. Each cell has a 6-9 mm black, round seed, which is what is popular as a traditional washing soap. Flowering: November-January.


Botanical Information:

Botanical Name: Sapindus Mukorossi
Common Names: Soapnut, Soap Nut, Soapberry, Soap Berry, Washnut, and Wash Nut.
Common Names (in Hindi): Ritha, Reetha, Aritha, Dodan, Doadni, Doda, Kanma and Thali

Kingdom: Plantae - Plants
Subkingdom: Tracheobionta - Vascular plants
Superdivision: Spermatophyta - Seed plants
Division: Magnoliophyta - Flowering plants
Class: Magnoliopsida - Dicotyledons
Subclass: Rosidae
Order: Sapindales
Family: Sapindaceae – Soapberry family
Genus: Sapindus – Soapberry
Species : Sapindus Mukorossi – Chinese soapberry



Wednesday, May 6, 2009

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சிவகங்கை ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும்.

சிவகங்கை மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்

சிவகங்கைச் சீமை மீட்பு

சிவகங்கை">772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான்">தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் (இன்னமும் எழுதப்படவில்லை)">வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்">திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி (இன்னமும் எழுதப்படவில்லை)">ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் (இன்னமும் எழுதப்படவில்லை)">வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

காளையார் கோவில் (இன்னமும் எழுதப்படவில்லை)">காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி (இன்னமும் எழுதப்படவில்லை)">ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோல் (இன்னமும் எழுதப்படவில்லை)">செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து (இன்னமும் எழுதப்படவில்லை)">குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

பூவந்தி தங்களை அன்புடன் வரவேற்கிறது

அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

AddThis

Bookmark and Share